×

ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

 

ஸ்ரீமுஷ்ணம், மே 6: ஸ்ரீமுஷ்ணம் அருகே விருத்தாசலம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின்கீழ் கானூர் பெரிய ஏரி உள்ளது.  இந்த ஏரியில் நேற்று காலை 10 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ராஜேஷ்(30), அவரது நண்பர்கள் ராமதுரை, சேகர் ஆகிய 3 பேரும் ஏரியில் மீன் பிடித்துவிட்டு திரும்ப வந்தபோது, ராஜேஷ் மீண்டும் ஏரிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் ராஜேஷ் வராததை கண்ட அவரது நண்பர்கள் ஏரிக்கு சென்று பார்த்தபோது ஏரியில் ராஜேஷ் மூழ்கி இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரது தாயார் கண்ணகிக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து ராஜேஷ் சடலத்தை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post ஏரியில் மூழ்கி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Srimushnam ,Kanur Periya lake ,Vrudhachalam PWD ,Ravichandran ,Rajesh ,Ramadurai ,Shekhar ,
× RELATED ஸ்ரீமுஷ்ணம் கோயிலுக்குள் கார் பாய்ந்ததால் பரபரப்பு..!!